
செய்திகள் இந்தியா
யேமனில் கேரள செவிலியரின் மரண தண்டனையை நிறுத்திய கேரள காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது
புது டெல்லி:
யேமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை கடைசி நேரத்தில் கேரளத்தின் முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது நிறுத்தினார்.
கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட இருந்தது. இதைத் தடுக்க இந்திய அரசு ராஜீய ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்க வில்லை. இதனை இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது இறுதிக்கட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கர் அஹமது, யேமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த தலால் அப்து மெஹதி குடும்பத்தினருக்கும், ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் முடக்கப்படும்
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm