செய்திகள் உலகம்
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி படுகொலைக்கு எதிர்வினை: பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகம் அடித்து நொறுக்கப்பட்டது: துப்பாக்கிசூட்டில் 22 பேர் பலி
கராச்சி:
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கராச்சி நகரில் நேற்று ஆயிரக்கணக்கான பொது மக்கள் அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூதரகத்தின் பிரதான வாயிலைக் கடந்து கூட்டமாகச் சென்ற இளைஞர்கள் வளாகத்துக்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 22 பேர் உயிரிழந்தனர்.
சிந்து மாகாண மருத்துவமனையின் டாக்டர் சுமையா சையத் கூறுகையில், மருத்துவமனைக்கு 22 உடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 7:49 pm
ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம்?
March 1, 2026, 5:05 pm
அயத்துல்லா அலி கமெனி மரணத்திற்கு கண்ணீர் வடிக்கும் மக்கள்
March 1, 2026, 11:03 am
கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
March 1, 2026, 1:29 am
ஈரான் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 85 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்தன
February 28, 2026, 7:22 pm
ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
February 28, 2026, 4:55 pm
தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது
February 27, 2026, 3:14 pm
இஸ்ரேல் ராணுவ பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்தனர்
February 27, 2026, 2:39 pm
