
செய்திகள் இந்தியா
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
புது டெல்லி:
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் 19 பாதுகாப்பு வாகனங்கள் கலப்பட பெட்ரோலால் திடீரென பழுதாகி நின்றன. இதையடுத்து பெட்ரோல் நிரப்பிய பங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
ரத்லம் மாவட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவரின் பாதுகாப்புக்காக வந்த 19 பாதுகாப்புப் படை, காவல் துறை வாகனங்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டது.
ஆனால், சிறிது தூரம் சென்றதுமே 19 வாகனங்களும் திடீரென அடுத்தடுத்து பழுதாகி நின்றுவிட்டன.
இதனால், பாதுகாப்பு வீரர்கள் அந்த கார்களைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்தினர்.
ஒரே நேரத்தில் பழுதானது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வாகனங்களில கலப்பட எரிபொருள் நிரப்பியதுதான் பிரச்னைக்கு காரணம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm