நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

குயிங்தவோ: 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.  எஸ்சிஓ அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

மாநாட்டின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதற்கு, பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரயில் கடத்தல் சம்பவம் குறித்து குறிப்பிடப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset