நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்

புது டெல்லி: 

அகமதாபாத்  விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து  தரவுகளை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒன்று ஜூன் 13ம் தேதி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தும், மற்றொன்று ஜூன் 16ம் தேதி இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டது.

இவை ஜூன் 24ம் தேதி தில்லிக்கு கொண்டுவரப்பட்டன.

முன்புற கருப்புப் பெட்டியில் இருந்து விபத்து பாதுகாப்பு தொகுப்பு பிரித்தெடுக்கப்பட்டு, தகவல் சேமிப்பு தொகுப்பில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது.

விமான அறை குரல் பதிவுக் கருவி மற்றும் விமானத் தரவு பதிவுக் கருவி தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset