நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: 

இ​மாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வடமாநிலங்​களில் மழை பாதிப்​பு, விபத்து காரண​மாக 10 பேர் உயி​ரிழந்​தனர். பலரை காண​வில்​லை. இமாச்சல பிரதேசத்​தில் மணாலி, ஜீவா நல்​லா, ஷிலாகர், ஸ்ட்​ரோ, ஹோரன்​கர் உள்​ளிட்ட பகு​தி​களில் நேற்று மேகவெடிப்பு ஏற்​பட்​டது. இந்த பகு​தி​களின் நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது.

இமாச்​சலின் தரம்​சாலா பகு​தி, கன்​னி​யாரா கிராமத்​தில் நீர்​மின் நிலைய கட்​டு​மான பணி​கள் நடை​பெறுகின்​றன. இங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்த சுமார் 20 தொழிலா​ளர்​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் 4 பேரின் சடலங்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன. மீத​முள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது.

இமாச்சல பிரதேசத்​தின் பல்​வேறு சுற்​றுலா தலங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. அந்த பகு​தி​களில் சிக்​கித் தவிக்​கும் சுமார் 2,000-க்​கும் மேற்​பட்ட சுற்​றுலா பயணி​களை பத்​திர​மாக மீட்க முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன.

இந்த சூழலில் உத்​த​ராகண்​டின் பத்​ரி​நாத் கோயிலுக்கு 20 பக்​தர்​கள் பேருந்​தில் சென்று கொண்​டிருந்​தனர். கோல்​திர் பகு​தி​யில் பேருந்து சென்​ற​போது பின்​னால் வந்த லாரி மோதி​யது. 

இதில் அலக்​நந்தா ஆற்​றில் பேருந்து கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 8 பேர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்​டனர். 9 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset