
செய்திகள் இந்தியா
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி:
இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன.
இந்த சூழலில் உத்தராகண்டின் பத்ரிநாத் கோயிலுக்கு 20 பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்திர் பகுதியில் பேருந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் அலக்நந்தா ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm