நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு

சிம்லா:

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மூன்று இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனால் ஏராளமான வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

அங்கு நீர்மின் திட்டப் பணிக்காக தங்கியிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பியாஸ், சட்லெஜ் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset