
செய்திகள் இந்தியா
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சங்கர்பள்ளி அருகே நிகழ்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 13 விநாடி காணொலியில், கியா சோனெட் ரக கார் ஒன்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவதை பார்க்க முடிந்தது.
அப்பகுதி மக்களும், ரயில்வே ஊழியர்களும், போலீஸாரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்ததும் காணொலியில் காண முடிந்தது.
வேலையை இழந்து ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அப்பெண் இவ்வாறு காரை ஓட்டியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி கூறியுள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm