நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்

புது டெல்லி: 

மனைவியை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக Black cat படை வீரர் ஒருவர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாக உச்சநீதிமன்றத்தில் கூறி  தப்பிக்க முயன்றார்.

அவருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் எந்தவித சட்ட பாதுகாப்பும் கிடையாது.

திருமணமான 2 வருடங்களில் தனது மனைவி உயிரிழந்ததையடுத்து, கமாண்டோவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கமாண்டே வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் முன் ஆஜரான கமாண்டோவின் வழக்குரைஞர், 20 வருடங்களாக அவர் கமாண்டோவாக உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டையும் தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கமாண்டோ தனது வலிமையை படையில்தான் காண்பிக்க வேண்டும். வீட்டில் காண்பிக்க அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று கூறி சரணடைய 2 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset