நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி இறந்து கிடந்தார்: அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது

சைபர்ஜெயா:

சைபர்ஜெயாவில் உள்ள பிரபல பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 20 வயதுடைய மாணவி ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 

மேலும் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

முன்னதாக சரவா கூச்சிங்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சீக்கிய இளம் பெண், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவரது தோழியால் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். 

பின்னர் அந்த நண்பர் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார்.

அம்மாணவி மற்ற ஐந்து மாணவிகளுடன் அங்கு தங்கியிருந்தார்.

ஆனால் ஜூன் 21 அன்று விடுமுறைக்காக அவர்கள் அனைவரும்  வீடு திரும்பியிருந்தனர்.

வரவிருக்கும் தேர்வுக்கு தயாராக திட்டமிடப்பட்டிருந்ததால், அம்மாணவி  விடுதியில் தனியாக தங்கியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி உட்பட பல பொருட்கள் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகளில் போலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உடலை விடுதியில் இருந்து அகற்றி மேலதிக விசாரணைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைக் காண முடிந்தது.

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பில் போலிஸ் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset