நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு

புது டெல்லி:  

மாணவர்கள் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சிபெறுவதைத் தடுக்க  அவர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

உ.பி. அரசு அங்கீகாரப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்க குறுக்கு வழியில் மாணவர்களுக்கு கோஸ்ட் முறை எனப்படும் பள்ளிக்கு வராமல் சேர்க்கை என்ற முறை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தபின்  ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றனர். இறுதி தேர்வுகளில் லஞ்சம் கொடுத்து  பாஸாகி விடுவதாக புகார் உள்ளது.

இதை தடுக்க உ.பி அரசு மாணவர், ஆசிரியர் வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset