
செய்திகள் இந்தியா
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: அமைச்சர்
புது டெல்லி:
குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமானத்தின் கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாமல் இந்தியாவிலேயே தகவல் சேகரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதை அறிய விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியை எடுத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கருப்புப் பெட்டி தீயில் கடுமையாக சேதமடைந்ததால், அதனை ஆய்வுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் இருப்பதாகவும், அது குறித்து விமான விபத்துகள் புலனாய்வுப் பணியகம் விசாரித்து வருவதாகவும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm