நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்

பாரிஸ்:

பிரான்ஸ் முழுவதும் இசை விழா நடந்துகொண்டிருக்கையில் சுமார் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்.

பாரிஸ் நகரில் 13 சம்பவங்கள் பதிவானதாக The New York Times தெரிவித்தது.

சிலர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவத்தின் தொடர்பில் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக The New York Times குறிப்பிட்டது.

யார் கைதுசெய்யப்பட்டார், அந்த ஊசிகளில் என்ன பொருள்கள் அடங்கியிருந்தன போன்ற விவரங்களைப் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியிடவில்லை.

சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று
அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset