
செய்திகள் இந்தியா
3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது ஏர் இந்தியா
மும்பை:
விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு நடைமுறையில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதால் 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் DGCA உத்தரவிட்டது.
அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்த விபத்தில் 230 பயணிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்குவது, கட்டாய ஓய்வு அளிப்பது, உரிமங்களைச் சரிபார்த்தல் ஆகியவற்றில் ஏர் இந்தியா நிறுவனம் மீறியிருப்பது தெரியவந்ததது.
இதையடுத்து, இதற்கு பொறுப்புடைய ஏர் இந்தியா மண்டல துணைத் தலைவர் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய DGCA உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am