
செய்திகள் இந்தியா
உலகளாவிய ஒற்றுமைக்கான சக்தி யோகா: பிரதமர் மோடி
புது டெல்லி:
யோகாவை தனிப்பட்ட பயிற்சியாக கருதாமல் உலகளாவிய ஒற்றுமைக்கான சக்தியாக ஏற்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மாணவ, மாணவிகள் என 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாள்தான் சர்வதேச யோகா தினம்.. யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்ல.
உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.
உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am