
செய்திகள் இந்தியா
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
பாலகாட்,
மனிதனைக் கடித்த பாம்பு ஒன்று அடுத்த 5-6 நிமிடங்களில் இறந்திருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குட்சோடி கிராமத்தில் 25 வயதான சச்சின் நாக்பூரே என்பவர்அப்பகுதியில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் அவர் தனது பண்ணைக்குச் சென்றபோது தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, பாம்பு அவரைக் கடித்துள்ளது. இருப்பினும், அந்த நபரைக் கடித்த 5-6 நிமிடங்களுக்குள், அந்த பாம்பு இறந்துவிட்டது
இந்தச் சம்பவம் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாம்பு கடித்த அந்த நபர் ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரஞ்சி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கிளைகளைப் பயன்படுத்தி கடந்த 7-8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக சச்சின் தெரிவித்தார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm