செய்திகள் இந்தியா
ஆடவரை கடித்ததும் பாம்புதான்... இறந்தது பாம்புதான் : அதிசயம் ஆனால் உண்மை
பாலகாட்,
மனிதனைக் கடித்த பாம்பு ஒன்று அடுத்த 5-6 நிமிடங்களில் இறந்திருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குட்சோடி கிராமத்தில் 25 வயதான சச்சின் நாக்பூரே என்பவர்அப்பகுதியில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் அவர் தனது பண்ணைக்குச் சென்றபோது தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, பாம்பு அவரைக் கடித்துள்ளது. இருப்பினும், அந்த நபரைக் கடித்த 5-6 நிமிடங்களுக்குள், அந்த பாம்பு இறந்துவிட்டது
இந்தச் சம்பவம் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாம்பு கடித்த அந்த நபர் ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரஞ்சி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கிளைகளைப் பயன்படுத்தி கடந்த 7-8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக சச்சின் தெரிவித்தார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
மாணவியின் பலிக்கு 'பகடிவதை' காரணமா?: கதறும் தாயின் வாக்குமூலம்
April 18, 2026, 5:10 pm
கடனை திருப்பிக் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த கதி: ஆத்திரத்தில் காதை கடித்துக் குதறிய பெண்
April 18, 2026, 5:06 pm
காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலி
April 18, 2026, 7:21 am
இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி
April 17, 2026, 5:54 pm
