நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்கிறது 

புதுடெல்லி: 

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் தாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான எஸ்சிஓ (SCO) அறிக்கையில் சேர வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை ஈரான் புரிந்துகொள்கிறது. ஆனால், ஈரானின் நிலைப்பாட்டை இந்தியா தாமாக ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள "ஆட்சியின் சின்னங்கள்" மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset