நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

"ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல... அதிகாரம்”: அமீத்ஷாவிற்கு  ராகுல் காந்தி பதில் 

புதுடெல்லி;

ஆங்கிலத்தில் உரையாடுவதை இந்தியர்கள் வெட்கமாக உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமித் ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் அல்லாத சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று பேசியிருந்தார். அமித் ஷாவின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆங்கிலம் என்பது அணை அல்ல அது ஒரு பாலம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல; அது ஒரு அதிகாரம். ஆங்கிலம் என்பது கை விலங்கல்ல; விலங்குகளை உடைக்கும் கருவி.

இந்தியாவின் ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை. ஏழைகள் கேள்வி கேட்பதையோ அல்லது முன்னேறுவதையோ சரி சமமாக மாறுவதையோ அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் வேலை வாய்ப்பை தருவதோடு நம்பிக்கையும் ஊக்குவிப்பது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு போன்றவை இருக்கிறது. அவற்றை நாம் கொண்டாடும் அதே வேளையில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். உலகத்தோடு இந்தியா போட்டி போடுவதற்கு இதுவே வழி. அதுவே ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset