நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன அரசாங்க ஊழியர்கள் வெளியில் உணவு உண்ணத் தடை

பெய்ஜிங்: 

சீன அரசாங்க ஊழியர்கள் சிலருக்கு, மூன்று பேருக்கு மேல் குழுவாக வெளியில் உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருந்துகளில் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் சிலர் உயிரிழந்ததையடுத்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சமூக ஊடகப் பதிவுகள் கூறுகின்றன.

மேலும், சீன அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள வேளையில் இத்தகவல் வெளியானது.

ஆடம்பர விருந்துகளில் கலந்துகொள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகச் செலவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள், காரில் உபரியாகப் பொருத்தப்படும் ஆடம்பரக் கருவிகள், வேலை தொடர்பான கூட்டங்களில் அலங்காரச் செடிகள் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்படுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset