நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

3ஆவது நாளாக போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஈரான் நாடுகள்: இஸ்ரேலின் ஹனிபா நகரைத் தாக்கி சின்னாபின்னமாக்கிய ஈரான்

டெல் அவிவ்:

இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 3-ஆவது நாளாக போர் நீடித்​தது. 

இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. 

இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள இராணுவ அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் தொடர்ந்து ஏவு​கணை​கள் விழுந்​தவண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய மக்கள் பதுங்கு குழிகளில் தத்தம் குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் தங்கி உள்ளனர்.

கார் பார்க்கிங் பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி அமைத்துள்ளது.

‘ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். 

இஸ்​ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது’ என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் கூறின. 

ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் அந்த நாட்​டின் அணுசக்தி தலை​மையகம் உள்​ளது. இதை குறி​வைத்து இஸ்​ரேல் ட்ரோன்​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் அணுசக்தி தலை​மையகத்தின் ஒரு பகுதி தீக்​கிரை​யானது.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்​போது, 

‘‘இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு நாங்​கள் ஒரு​போதும் அடிபணிய மாட்​டோம்’’ என்று உறுதிபட தெரி​வித்​தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset