
செய்திகள் உலகம்
3ஆவது நாளாக போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஈரான் நாடுகள்: இஸ்ரேலின் ஹனிபா நகரைத் தாக்கி சின்னாபின்னமாக்கிய ஈரான்
டெல் அவிவ்:
இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 3-ஆவது நாளாக போர் நீடித்தது.
இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 150 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளில் விழுந்தன.
இஸ்ரேலின் பாட் யாம் நகரில் உள்ள இராணுவ அடுக்குமாடி குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகள் மீதும் தொடர்ந்து ஏவுகணைகள் விழுந்தவண்ணம் உள்ளன.
இஸ்ரேலிய மக்கள் பதுங்கு குழிகளில் தத்தம் குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் தங்கி உள்ளனர்.
கார் பார்க்கிங் பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி அமைத்துள்ளது.
‘ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் கூறின.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்த நாட்டின் அணுசக்தி தலைமையகம் உள்ளது. இதை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் அணுசக்தி தலைமையகத்தின் ஒரு பகுதி தீக்கிரையானது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்போது,
‘‘இஸ்ரேலுக்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம் நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் சதிகளை முறியடிக்க முடியும். அமெரிக்காவின் அழுத்தத்துக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:15 pm
இஸ்ரேலின் ஹைபா நகரை ஈரான் குறிவைக்கும் நோக்கம் என்ன தெரியுமா?
June 17, 2025, 4:17 pm
சீன அரசாங்க ஊழியர்கள் வெளியில் உணவு உண்ணத் தடை
June 17, 2025, 6:34 am
இஸ்ரேலின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரானுக்கு சீனா ஆதரவு
June 16, 2025, 4:49 pm
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
June 16, 2025, 2:39 pm
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: மத்தியஸ்தம் செய்ய வந்த டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm