நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: மத்தியஸ்தம் செய்ய வந்த டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி 

தெஹ்ரான்:

ஈரான் மீது இஸ்ரேல் 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் டிரோன்களையும் சரமாரியாக பொழிந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா, பாகிஸ்தானைப் போல, இஸ்ரேல், ஈரானையும் ஒப்பந்தம் மேற்கொள்ள செய்வேன்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஈரானோ, 'இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தப்பின்தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம்' என்று இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் மற்றும் கத்தாரிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

இந்த நான்கு நாள்கள் தாக்குதலில், இஸ்ரேலில் குறைந்தபட்சம் 230 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று ஈரானின் சுகாதரத் துறை கூறியுள்ளது.

ஆனால் இஸ்ரேலோ ஈரானின் தாக்குதலால் கிட்டத்தட்ட 10 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறிவருகிறது. உண்மை வெளியில் தெரிந்தால் தங்களது இராணுவம் சோர்வடைவார்கள் என்று பொய்த்தகவல்களை பரப்பி வருவதாக சர்வதேச நடுநிலை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக நேற்று ஏமனின் ஹவுத்தி போராளிகளும் களம் இறங்கியிருக்கிறார்கள். இதனை இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்திற்கு சம்பந்தமான இடங்களில்தான் இஸ்ரேல் பெரும்பாலும் குறிவைத்து இருந்தது என்று இஸ்ரேலும் அதன் ஊடகங்களும் திரும்பத்திரும்ப கூறிவந்தன. 

இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலில் ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேல் தங்கள் மக்களை பாதுகாக்க தவறினால் உள்நாட்டிலேயே மிகப் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தெரிகிறது. பதுங்கு குழிகளில் கடந்த 3 நாட்களாக இருந்துவரும் இஸ்ரேலியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset