நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நமது பிள்ளைகள் நாட்டின்(அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்: முன்னாள் இராணுவ ஆலோசகர் எச்சரிக்கை

வாஷிங்டன்:

இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டிய இஸ்ரேல், நம்மை  பிராந்திய மோதலுக்குள் இழுக்கிறது என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ ஆலோசகர் டக்ளஸ் மெர்கர் கூறினார்.

இது ஓர் அணு ஆயுதப் போராகவும் உருவெடுக்கக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், வளைகுடாவின் பிற பகுதிகளில் உள்ள நமது 40,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 

அவர்கள் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகள் ஆவர். ஈரானின் 'ஷாஹித்-136' ட்ரோன் விமானங்கள் வெறும் 20,000 அமெரிக்க டாலரில் தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இதைத் தடுக்கும் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை ஒன்றுக்கு 40 இலட்சம் டாலர் செலவாகிறது.

இது நமது ஏவுகணை கையிருப்புகளை முற்றிலுமாகத் தீர்த்து, நம்மைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளும்.

அதே நேரத்தில், நமது பிள்ளைகள் நாட்டின் (அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்.

இவ்வாறு பென்டகனின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர் தெரிவித்துள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset