
செய்திகள் மலேசியா
நபி இப்ராஹிம், இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வேளையில் காஸா மக்களுக்காகவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நபி இப்ராஹிம், நபி இஸ்மாயில் ஆகியோரால் போற்றப்பட்ட தியாகம், உன்னத மதிப்புகளின் படிப்பினைகளைப் பெற வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தியாகப் பெருநாள் வாழ்த்து செய்தியில் இதனை வலியுறுத்தினார்.
ஒரு தந்தை, தீர்க்கதரிசியின் இறுதி தியாகத்தின் வடிவத்தில் நபி இப்ராஹிம் முன்வைத்த அர்ப்பணிப்பு, ஞானத்தை மட்டுமல்ல, ஆரோக்கியமான, துடிப்பான, ஆழமாக வேரூன்றிய தக்வாவின் முன்மாதிரியையும் கொண்டுள்ளது.
நபி இப்ராஹிம் இறைவழிபாட்டைத் தவிர வேறு எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் விமர்சன சிந்தனையையும் சத்தியத்தைப் பாராட்டுவதையும் தூண்டுவதற்கான ஒரு உத்தியாக தனது சமுதாய மக்களை திடமான உரையாடல், ஆரோக்கியமான விவாதத்திற்கு ஊக்குவித்தார்.
வலுவான சுய ஒழுக்கம் கொண்ட விவேகமுள்ள மனம், தனிநபர்களின் சமூகத்தை அவர் வார்த்தெடுத்தார்.
தியாகப் பெருநாளின் போது தக்பீர் முழங்கும் அதே வேளையில், துன்பங்களைத் தாங்கிக் கொண்டு தங்கள் நகரங்களையும் நிலங்களையும் பாதுகாக்க தங்களைத் தியாகம் செய்தவர்களையும்,
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ளவர்களையும் மறந்துவிடக் கூடாது என்றும் அன்வார் அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 4:58 pm
மறுசீரமைப்புக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்: டிபிகேல்
June 7, 2025, 2:55 pm
ஹஜ் யாத்திரை மோசடிகள் அதிகரிப்பு: சிலாங்கூர் சுல்தான் வருத்தம்
June 7, 2025, 2:50 pm
ஆசியான் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் முறையாக விவாதிக்கப்படும்: அன்வார்
June 7, 2025, 10:39 am
ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக செய்ய மஹிமா தயார்: டத்தோ சிவக்குமார்
June 7, 2025, 9:54 am
Femi9 உடலை மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் : டாக்டர் சத்தியவதி
June 6, 2025, 5:15 pm