நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வார் கொடுக்கும் 600 ரிங்கிட் போதும். மற்றவர்களுக்கு உதவுகள்: இந்திய முதியவரின் காணொலி வைரல்

கோலாலம்பூர்:

பிரதமர் அன்வார் கொடுக்கும் 600 ரிங்கிட் தனக்குப் போதும் என்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்து உதவுகள் என்று முதியவர் கூறும் காணொலி சமூக ஊடகத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தக் காணொலியை மலேசிய சமூக ஊடகப் பிரபலம், Cahaya Icha தனது சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

அதில் Cahaya Icha ஒரு கடைக்கு முன் நின்று கொண்டிருந்த இந்திய முதியவரிடம் சென்று அவருக்குத் திருமணமாகிவிட்டதா, அவருக்குத் தேவையான சமையல் பொருள்களை வாங்கி உதவுதாகக் கூறினார். 

அம்முதியவர் தனக்குத் திருமணமாகவில்லை என்றும் தனக்கு 80 வயதாகும் நிலையில் இன்னும் சிறிது காலத்தில் தாம் இறந்து விடுவதாகக் கூறினார்.

அதனால் உதவி தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவுகள் என்று சமூக ஊடகப் பிரபலத்திடம் அம்முதியவர் கூறினார்.

மேலும், மாதந்தோறும் பிரதமர் அன்வாரின் அரசு வழங்கப்படும் 600 ரிங்கிட் உதவி நிதியே தனக்குப் போதும் என்று கூறினார். 

மீண்டும் மீண்டும் உதவ முனைவதாகக் கூறிய Cahaya Icha-வின் குணத்தைப் பாராட்டும் வகையில் முதியவர் அவர் கையில் வைத்திருந்த ஒரு  50 ரிங்கிட் நோட்டை எடுத்துக் கொண்டு நன்றி கூறினார். 

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. 

அவர் ஒரு உண்மையான மனிதநேயம் கொண்டவர்; அவர் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள்” என்றும் சிலர் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

பலர் “இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதற்கு முதியவரே முன்னுதாரணம் என்றும் தெரிவித்துள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset