
செய்திகள் மலேசியா
Femi9 உடலை மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் : டாக்டர் சத்தியவதி
கோலாலம்பூர்:
Femi9 நப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களின் உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். அதே நேரத்தில் இதன் முகவர்களாக மாறி, பொருளாதார ரீதியில் அனைவரும் தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என வம்சம் கருவுறுதல் மையத்தின் நிறுவனரும் மலேசியாவில் femi9 மாதவிடாய் நாப்கினின் முதல் விநியோகதருமான முனைவர் சத்தியவதி கூறினார்.
அண்மையில் GOPIO Entrepreneur Forum & Networking Dinner 2025 நிகழ்ச்சியில் முனைவர் சத்தியவதி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு இளம் தொழில் முனைவோர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
தொழில்முனைவராக தாம் உருமாறிய பயணத்தை பக்ர்ந்து கொண்ட அவர், தொழில் துறையில் மேம்பட எம்மாதிரியான அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்பதையும் எடுத்துரைத்தார். அதோடு femi9 முகவர்களாக மாறி, பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக அவர் தமதுரையில் சுட்டிக் காட்டினார்.
"Stay Confident, Stay femi9" என்ற தலைப்பிலான அவரது அமர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்தது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஃபெமி9 நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குவதாக அவர் கூறினார்.
குறிப்பாக, 100% இயற்கையான வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நப்கின்கள் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
பெண்களின் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வை அதிகரித்து, எல்லோருக்கும் மலிவாக கிடைக்கும் வகையில் உழைத்து வரும் இந்த நிறுவனம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர்.
பங்கேற்பாளர்கள் femi9 முகவர்களாக இணைவதற்கு இணைக்கம் தெரிவித்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த மே 30-ஆம் தேதி Kelab Royal Selangor-இல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தூதர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசியாவிற்கான இந்திய தூதர் B.N. Reddy முனைவர் சத்தியவதியின் முன்னெடுப்புகளைப் பாராட்டியதோடு இந்த வணிகத்தை விரிவுப்படுத்துவது குறித்த ஆலோசனையையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி இந்திய வம்சாவளியினரை உலகளாவிய தொழில்முனைவோர்களாக உருவாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக திகழ்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 4:58 pm
மறுசீரமைப்புக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்: டிபிகேல்
June 7, 2025, 2:55 pm
ஹஜ் யாத்திரை மோசடிகள் அதிகரிப்பு: சிலாங்கூர் சுல்தான் வருத்தம்
June 7, 2025, 2:50 pm
ஆசியான் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் முறையாக விவாதிக்கப்படும்: அன்வார்
June 7, 2025, 10:39 am
ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக செய்ய மஹிமா தயார்: டத்தோ சிவக்குமார்
June 6, 2025, 5:15 pm