நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் முறையாக விவாதிக்கப்படும்: அன்வார்

புத்ரா ஜெயா:

ஆசியான் உரையாடல் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் குறித்து முறையாக விவாதிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆசியானின் முழுமையான உரையாடல் கூட்டாளியாக மாறுவதற்கான விருப்பத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் வட்டார நாட்டுத் தலைவர்களுடன் விவாதிக்கப்படும்.

ஆசியான் தலைவர்களின் மாநாடு, கலந்துரையாடலுக்கு பின் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

இங்குள்ள புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர் சுருக்கமாக இதைத் தொட்டு கூறினார்.

1993ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியானின் முதல் துறைசார் உரையாடல் கூட்டாளியாகவும் இருக்கும் பாகிஸ்தான், வட்டார கூட்டமைப்புடனான ஒத்துழைப்பை மதிக்கிறது. தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset