
செய்திகள் மலேசியா
தியாக உணர்வு மக்களை நல்லிணக்கம், அன்புடன் ஒன்றிணைக்கட்டும்: மாமன்னர் தம்பதியரின் தியாகப் பெருநாள் வாழ்த்து
கோலாலம்பூர்:
ஹஜ்ஜுப் பெருநாளில் தியாக உணர்வுடன் மலேசிய மக்களை நல்லிணக்கம், அன்புடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அவரின் துணைவியார் ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் தங்களின் தியாகப் பெருநாள் வாழ்த்து செய்தியில் இதனை வலியுறுத்தினர்.
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தங்கள் தியாகப் பெருநாள் வாழ்த்துகள்.
தியாகத்தை முழுமையாகச் செய்வதால் அது ஆசீர்வதிக்கப்படும். அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இந்த தியாக உணர்வு மக்களை நல்லிணக்கம், அன்பு, உலகளாவிய மனித விழுமியங்களில் தொடர்ந்து ஒன்றிணைக்க வேண்டும்.
புனித பூமியில் உள்ள மலேசிய யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ் கிரியைகளை பாதுகாப்பாகச் செய்து வெற்றிகரமான ஹஜ்ஜைப் பெற வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 4:58 pm
மறுசீரமைப்புக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்: டிபிகேல்
June 7, 2025, 2:55 pm
ஹஜ் யாத்திரை மோசடிகள் அதிகரிப்பு: சிலாங்கூர் சுல்தான் வருத்தம்
June 7, 2025, 2:50 pm
ஆசியான் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் முறையாக விவாதிக்கப்படும்: அன்வார்
June 7, 2025, 10:39 am
ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக செய்ய மஹிமா தயார்: டத்தோ சிவக்குமார்
June 7, 2025, 9:54 am
Femi9 உடலை மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் : டாக்டர் சத்தியவதி
June 6, 2025, 5:15 pm