நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுயமாக வருமானத்தை பெறுவதற்கான முயற்சிகளை ஆலய நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்: டத்தோ சிவக்குமார்

பந்திங்:

சுயமாக வருமானத்தை பெறுவதற்கான முயற்சிகளை ஆலய நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

பந்திங் கிளானாங் பாரு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

இவ் வாலயத்தில் இன்னமும் கடந்த கால தோட்டப்புறங்களின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதே வேளையில் ஆலயத் தலைவர் ரங்கநாதன் ஏழுமலை, கட்டிடக் குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்த போது,

புதிய ஆலயத்தை கட்டுவதற்கான அடிப்படை வேலைகளை தொடங்கி விட்டதாக கூறினார்.

மேலும் ஆலயத்திற்கு அருகில் மண்டபம் ஒன்றையும் கட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 மில்லியன் ரிங்கிட் செலவில் இத் திட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

அதே வேளையில் அவர்களின் சொந்த பங்களிப்பாக 1 லட்சம் ரிங்கிட்டையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இவ் வேளையில் அவர்களை நான் பாராட்டுகிறேன்.

மேலும் மண்டபம் கட்டுவது சிறப்பான திட்டமாகும். இதன் மூலம் ஆலயத்திற்கு வருமானமும் கிடைக்கும்.

இதுபோன்ற ஆலய நிர்வாகங்கள் சொந்தமாக ஆலயங்களுக்கு வருமானம் கிடைக்கும் திட்டங்களை தொடங்க வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset