செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகழாரம்
சென்னை:
"தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்த நாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்" என்று காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளமாக அமைந்தது.
இன்று முஸ்லிம்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினராவது அடிப்படைக் கல்வி முடித்து உயர் கல்வி பெறுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் காயிதே மில்லத் தான்.
முஹம்மது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘சமுதாயத்திற்கு வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 11:38 am
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்
August 13, 2026, 5:22 pm
5 மணி நேரமாக ஆலோசனை நடத்திய அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்
August 12, 2026, 12:46 pm
சென்னை கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி: தமிழக அரசு உத்தரவு
August 11, 2026, 9:58 am
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
August 10, 2026, 1:16 pm
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
August 9, 2026, 1:40 pm
