செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆகிய 10 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து கோயில் பொது தரிசனப்பாதையில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.
இதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 5:43 pm
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
June 11, 2026, 4:10 pm
திரைமொழியில் தனிமொழி பேசிய இயக்குநருக்கு புகழஞ்சலி
June 10, 2026, 3:01 pm
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
June 8, 2026, 12:58 pm
சென்னையில் மின்வெட்டு பிரச்சினை: இரவு நேரங்களில் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்
June 3, 2026, 5:00 pm
