செய்திகள் தமிழ் தொடர்புகள்
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ் ஆகியோரிடம் 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஒருவர், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யும், சேலம், மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 249-வது மனுவாகும். அதே போல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மேட்சல்- மகாஜகிரியைச் சேர்ந்த கண்டே சயன்னா என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இருவரும் எம்எல்ஏக்கள் முன்மொழிவை வழங்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜூன் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
July 16, 2026, 12:57 pm
