நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்

ஈப்போ: 

கடந்த மூன்று நாட்களாக தேசிய ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு பூப்பந்து போட்டியை பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர். இம்முறை ஈப்போ பேட்மிண்டன் அரங்கம் கம்போங் சீமியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் தலைவருமான நா.லோகநாதன் கூறினார்.

இம்முறை 24 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 700 க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக 35 வயதிற்குட்பட்ட மகளிர் இரட்டையர் புதிய பிரிவு அறிமுகம் செய்யபபட்டது. இப்பிரிவில் 20 குழுவினர் பங்கு பெற்றதாக அவர் சொன்னார்.

May be an image of 2 people, people playing football and text

இவ்வாண்டில் ஜோகூர், சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலத்தை சேர்ந்த விளையாட்டாளர்கள் அதிக பரிசுகளை வென்றனர். வெற்றியாளர்கள் அனைவருக்கும் தம் வாழ்த்தினை அவர் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிரமுகர்களாக டத்தோ எம்.கருத்து, ஈப்போ பாராட் எஸ். ஜெயகோபி, கிந்தா இந்தியர் சங்க தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா, எஸ்.மலர்வண்ணன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset