நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பேரா இந்திய பூப்பந்து மன்றத்தின் தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 730 போட்டியாளர்கள் பங்கேற்றனர்: லோகநாதன்

ஈப்போ:

பேரா இந்திய பூப்பந்து மன்றத்தின் தேசிய நிலையிலான பூப்பந்து போட்டியில் 730 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இம்மன்றத்தின் தலைவரும் ஏற்பாட்டுக் குழு தலைவருமான என். லோகநாதன் இதனை கூறினார்

பேரா மாநில இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 46ஆவது ஆண்டாக தேசிய நிலையில் பூப்பந்து விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய நிலையிலான இப்போட்டி சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கும் பொருட்டு விளையாட்டுத் துறை அமைச்சு 45 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளது .

இதில் 24 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவற்றில் 35 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் மகளிர் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரிவு அறிமுகம் செய்யப்படுள்ளதால் நாடு முழுவதுமுள்ள அதிகமான இந்திய மகளிர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இபபோட்டிகள் ஈப்போவில் உள்ள பூப்பந்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்வாண்டு 7 வயது வயது முதல் 70 வயதிற்கும் உடபட்டோர் இப்பூப்பந்து போட்டியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் பூப்பந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்ய ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என். லோகநாதன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக ஈப்போவில் நடைபெற்ற இப்போட்டியை பேரா மாநில சட்டமன்ற துணை சபாநாயகரும் கென்னிங் சட்டமன்ற உறுப்பினருமான ஜன்னி சோய்  சிறப்பு வருகை புரிந்து போட்டியை அதிகாரப்பூரவமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அரசாங்கம் விளையாட்டுத் துறையை தொடர்ந்து ஊக்கப்படுத்த அரசாங்கம் விளையாட்டு மன்றங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில் பேரா இந்தியர் பூப்பந்து மன்றம் 46 ஆவது ஆணடாக இப்போட்டியை நடத்தி வருவதுடன் பல சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்கி வருவதை அவர் பாராட்டினார்.

இம்மன்றம் மேற்கொண்டு வரும் அதன் நடவடிக்கைக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset