
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: பாரிஸ் ரசிகர் கொண்டாட்டங்களில் இருவர் மரணம்
பாரிஸ்:
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பிஎஸ்ஜி ரசிகர்கள் கொண்டாடியதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு நகரமான டாக்ஸில் மார்பில் குத்தப்பட்டதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய பாரிஸில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 23 வயது இளைஞரும் வாகனம் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய கிளப் கால்பந்தில் முதன்முறையாக மிகப்பெரிய கிண்ணத்தை பிஎஸ்ஜிவென்றதால்,
பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, வெடிகள் வெடிக்கப்பட்டன, பேருந்து நிறுத்துமிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 9:20 am
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை கிரிஸ்மேன் நீட்டித்துள்ளார்
June 3, 2025, 8:58 am
நண்பருடன் இணைந்து கால்பந்து கிளப்பை தொடங்கிய மெஸ்சி
June 2, 2025, 9:07 pm
பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்
June 2, 2025, 10:36 am