நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு

கொழும்பு:

இலங்கையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் ஊடாக, காத்தான்குடி நகர சபையைக் கைப்பற்றியுள்ள  உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (01)  இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ்,பிரதி தேசிய அமைப்பாளரும்,  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ் .உதுமாலெப்பை, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ்.நழீம்,உலமாக்கள்,  உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் முன்னிலையில் வெகுகோலாகலமாக இடம்பெற்றது. 

May be an image of 4 people, dais and text

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச். எம் .அஸ்பர் ,பிரதி தவிசாளர் எம் .ஐ .எம். ஜெஸீம் ஆகியோர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் இதன் போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

- ஏ ஆர் ஏ ஹபீஸ் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset