
செய்திகள் உலகம்
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு
கொழும்பு:
இலங்கையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றின் ஊடாக, காத்தான்குடி நகர சபையைக் கைப்பற்றியுள்ள உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ்,பிரதி தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ் .உதுமாலெப்பை, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ்.நழீம்,உலமாக்கள், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள்,பொது மக்கள் முன்னிலையில் வெகுகோலாகலமாக இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ் எச். எம் .அஸ்பர் ,பிரதி தவிசாளர் எம் .ஐ .எம். ஜெஸீம் ஆகியோர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் இதன் போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
- ஏ ஆர் ஏ ஹபீஸ்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am
தென்கொரியாவில் இன்று அதிபர் தேர்தல்: புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கின்றனர்
June 2, 2025, 6:28 pm