
செய்திகள் உலகம்
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டால் அந்நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாது என்று அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட இருந்த ஆயுதப் போரை தடுத்த நிறுத்திவிட்டேன். சண்டையை நிறுத்தவில்லை எனில் இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என எச்சரித்தேன்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் பிரதிநிதிகளும் அடுத்த வாரம் அமெரிக்கா வர உள்ளனர்.
அப்போது மீண்டும் சண்டையிட்டுக் கொண்டால் அந்த நாடுகளுடன் ர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம் காட்டாது என்று அவர்களிடம் கூறப்படும் என்றார்.
சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லை என இந்தியா மறுத்து வருகிறது.
அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதற்கு பிரதமர் மோடி எப்போது பதிலளிப்பார் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am