
செய்திகள் உலகம்
காசா உணவு விநியோக மையம் அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய கொடூரமான துப்பாக்கிசூட்டில் 31 பேர் பலி: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காசா:
காசாவில் உணவு விநியோகம் நடைபெறும் இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டிய்த்தனமான தாக்குதலில் பெண்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். க
காசாவின் மீது இஸ்ரேல் ராணுவம் மனிதாபிமானமற்று கொடூரமாக தாக்கி வருகிறது. இதுவரை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் காசாவில் அமெரிக்கா நிதியுதவியுடன் இயங்கி வரும் உணவு விநியோக மையத்திற்கு அருகே ஒரு கிமீ சுற்றளவில் உள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஸாகேர் அல் வாஹிதி துப்பாக்கிசூடு சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு கொல்லப்பட்டவர்களில் 20 பேர் பெண்கள் என்று கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm
அமெரிக்கா, ரஷியாவுக்கு தூதுக் குழுக்களை அனுப்பியது பாகிஸ்தான்
June 3, 2025, 6:05 pm
திடீர் நிலநடுக்கம்: பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
June 3, 2025, 5:38 pm
மங்கோலியா நாட்டு பிரதமர் Luvsannamsrain Oyun-Erdene பதவி விலகினார்
June 3, 2025, 12:51 pm
2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக இருக்கும்
June 3, 2025, 11:14 am
தென்கொரியாவில் இன்று அதிபர் தேர்தல்: புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்கின்றனர்
June 2, 2025, 6:28 pm