
செய்திகள் மலேசியா
சூரிய சக்தி தகடுகளுடன் புதுவகை சாலை உணவுக் கடைகள் திட்டத்திற்கு அரசு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது: ங்கா கோர் மிங்
கோலாலம்பூர்:
சாலையோர உணவு கடை வர்த்தகத்தை சீர்படுத்தும் நோக்கில் புதிய மாறுபட்ட உணவுக் கடைகள் வழங்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
MyKiosk எனும் இத்திட்டத்துக்கு அரசாங்கம் 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைகியோஸ்க் திட்டத்தின்கீழ் உள்ள சாலைக் கடைகள் சூரியசக்தித் தகடுகளில் இயங்குகின்றன.
சிறிய வர்த்தகர்கள் சட்டபூர்வமாகத் தொழில் நடத்த உதவுவது இத்திட்டத்தின் இலக்காகும்.
பாதுகாப்பான, கூடுதல் சுத்தம் மிகுந்த, வர்த்தகத்துக்குத் தோதான இடங்களுக்கு அவர்களை
சரியாக விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாத சூழல்களில் செயல்படும் சிறு தொழில்கள் செய்வோருக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
சாலையோர உணவு கடை வர்த்தகத்தை மேலும் சீராக்கும் நோக்கில் அக்கடைகளுக்கென வாகன நிறுத்துமிடங்கள், திறந்தவெளிப் பகுதிகள் ஆகியவற்றை அரசாங்கம் ஒதுக்கி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm