நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அரசு யாருக்கு தான் பதில் தரும் என்று தெரியவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் யாருக்கு தான் அரசு பதில் தரும் என்று தெரியவில்லை.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை தெரிவித்தார்.

2025/2026 அமர்விற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இந்திய மாணவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு மஇகாவின் கல்வி அமைச்சுக்கு கடிதம் எழுதியது.

ஆனால் அக்கடித்திற்கு இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஆதரிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக,

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு தகவல் கோரி அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பினேன்.

இன்று வரை எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நான் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால் இன்றைய அரசாங்கத்தைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்காத போது,   சாதாரண மக்களின் நிலை எப்படி என்று எனக்கு தெரியவில்லை.

தாப்பாவில் உள்ள துன் அகமது சார்ஜி மினி அரங்கில் ஒன்பதின்மர் பேர் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட பிறகு அவர்  செய்தியாளர்களிடம் இதனை கூறினார். 

மெட்டொகிலோஷனின் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பதில் கிடைக்காதவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் 

விரைவில் அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும் என்று நம்புகிறேன்  என்று அவர் கூறினார்

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset