
செய்திகள் மலேசியா
சிந்தூர் நடவடிக்கைகள்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் மலேசியாவின் ஆதரவை நாடி வருகை தந்த இந்திய நாடாளுமன்ற குழு
கோலாலம்பூர்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் குமார் ஜா தலைமையில் இந்தியாவில் இருந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மலேசியாவுக்கு வருகை தந்தது.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பொதுவான போராட்டத்தில் மலேசியாவின் ஆதரவைப் பெறவும், இந்தக் குழு மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாடாளுமன்றக் குழுவினர் விவரித்தனர்.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் யுத்தத்தை கைவிட்டு அமைதி காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்தியா அவரது ஆலோசனைக்கு மதிப்பளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சய் குமார், அப்படியல்ல. மலேசியா இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடு. பிரதமரின் கருத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்றார்.
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 நாட்களில் 11வது முறையாகக் கூறியுள்ளார்.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பின் நண்பர் பிரதமர் நரேந்திர மோடி, இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணிக்கிறாரே என்று நம்பிக்கையின் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சஞ்சய் குமார், ட்ரம்ப் மட்டும் அல்ல ரஷ்யா உட்பட இதர நாடுகளும் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்று கூறினார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்விக்கு, இல்லை. இப்பொழுது நிலைமை சீராக உள்ளாது. ஜம்முவுக்கு நாளொன்றுக்கு 13 விமானங்கள் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. நீங்கள் கவலை இல்லாமல் வந்து போகலாம் என்றார் அவர்.
முன்னதாக, மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி என் ரெட்டி செய்தியாளர்களை வரவேற்று உரையாற்றினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm