நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இரண்டு கெஅடிலான் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அதே வேளையில்  அம்னோ அமைச்சரான தெங்கு ஸப்ருல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அமைச்சரவையை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை.

தெங்கு ஸப்ருல் நிலைப்பாடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுடன் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விவாதங்களும் நடத்தப்படவில்லை.

ஆகையால் எந்த முடிவும் அவசரமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் கூறினார்.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு, முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சராக இருக்கும் ஸப்ருல், அம்னோவிலிருந்து வெளியேறி கெஅடிலானில் இணைவதாக அறிவித்தார்

இந்த நடவடிக்கை இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset