நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு முழுமையாக விரிவுப்படுத்தப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

மக்களிடையே குறிப்பாக பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு நாங்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பற்றுச்சீட்டுகளை வழங்குகிறோம். 

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புக்கு பின் அதை முடிவு செய்வோம்.

தலைநகரில் நடைபெறும் கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2025 இன் தொடக்க, நிறைவு விழாவில் பேசிய பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset