
செய்திகள் மலேசியா
தமிழ் கலாச்சாரத்தின் பல கூறுகளை தமிழ் வண்ண விழா வெற்றிகரமாக எடுத்துக் காட்டியுள்ளது: செனட்டர் சரஸ்வதி
ஷாஆலம்:
தமிழ் கலாச்சாரத்தின் பல கூறுகளை தமிழ் வண்ண விழா வெற்றிகரமாக எடுத்துக் காட்டியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.
ஷாஆலம் மாநகர் மன்றம், ஷூன் 13 எம்பிபி, எஸ்ஆர்எல்ஏ கலை, கலாச்சார அமைப்பு ஆகியவை இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வேளையில் ஷூன் 13 எம்பிபியின் தலைவர் நதீந்திரன் ராஜ் பாஸ்கரன், எஸ்ஆர்எப்ஏ கலை, கலாச்சார அமைப்பின் நிறுவனர் நளினி ரதாக்ரிஸ் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பலரை வெற்றிகரமாக ஒன்றிணைத்து,
தமிழ் கலை, கலாச்சாரத்தைக் கொண்டாடியதற்காக அவர்களுக்கு இந்த வாழ்த்துகள்.
இவ்வளவு பெரிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு எவ்வளவு முயற்சியும் சக்தியும் தேவை என்பது எனக்குத் தெரியும்.
இது எளிதான காரியமல்ல. ஆனால் நீங்கள் அனைவரும் உறுதியுடனும் குழுவாகவும் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான பணியைத் தொடர வாழ்த்துகிறேன்.
மேலும் இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதைப் பார்க்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது.
இது போன்ற விழாக்கள் மூலம் இளைய தலைமுறையினர் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எவ்வாறு பொறுப்பேற்கிறார்கள் என்பதைக் காணலாம்.
குறிப்பாம தமிழ் வண்ண விழா தமிழ் கலாச்சாரத்தின் அரிதாகவே காணப்படும் பல்வேறு கூறுகளை வெற்றிகரமாக எடுத்துரைத்துள்ளது.
தற்போதைய தலைமுறையினருக்கு மறக்கப்பட்டிருக்கலாம் அது இப்போது நினைவூட்டியுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm