
செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட இந்திய போதைப்பொருள் தலைவன் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டான்: ஐஜிபி
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட இந்திய போதைப்பொருள் தலைவன் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டான் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் கூறினார்.
அந்நாட்டு அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த மே 13ஆம் தேதி தலைநகரில் கைது செய்யப்பட்டான்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் அதிகாலை 1.35 மணிக்கு ஒரு ஹோட்டல் அறையில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, போதைப்பொருள் விநியோகத் தலைவன் என்று அழைக்கப்படும் 30 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டான்.
சம்பந்தப்பட்ட நபர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகளின் பாஸைப் பயன்படுத்தி அதிகாரிகளைத் தவிர்க்க நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
விசாரணையின் முடிவுகளின்படி, சந்தேக நபர் நாட்டில் எந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், அவருக்கு உள்ளூர் நெட்வொர்க் இருக்கிறதா அல்லது ரகசிய சமூகத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை மாலை 6.54 மணிக்கு விமானம் மூலம் தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm