
செய்திகள் மலேசியா
குங்ஃபூ Vs சீலாட்: டோல் சாவடியில் இரு நபர்கள் சண்டையிட்டுக் கொண்ட காணொலி வைரல்
புக்கிட் தம்பூன்:
புக்கிட் தம்பூன் டோல் சாவடி அருகே ஒரு மலாய்க்காரரும் சீனரும் சண்டையிட்டுக் கொள்ளும் காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது.
அக்காணொலியில் மலாய்க்காரர் அவர்களின் தற்காப்பு கலையான சீலாட் வித்தைக் காட்டும் அதேவேளையில் சீனா ஆடவர் குங் ஃபூ வித்தைகளைக் காட்டுவது பதிவு செய்யப்பட்டிருந்தது.
அச்சமயம், அங்கே வந்த இந்திய ஆடவர் இருவருக்கும் இடையிலான சண்டையை நிறுத்தியுல்ளார்.
இந்நிலையில், டோல் சாவடியில் இரண்டு ஆடவர்கள் சண்டையிட்டுக் கொண்டது தொடர்பில் போலிசார் இரண்டு புகார்களை பெற்றூள்ளதாகவும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் செபராங் பிறை மாவட்ட போலிஸ் தலைவர் ஜெய் ஜனவரி சியோவோ கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm