நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக அன்வாருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்: அந்தோனி லோக் 

சிரம்பான்:

சமீபத்தில் அமைச்சரவையிலிருந்து இரு அமைச்சர்கள் பதவி விலகியது  தொடர்பாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார். 

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரம் தொடர்பாகப் பிரதமர் முடிவெடுப்பார் என்று லோக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களை நியமிப்பது பிரதமரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 

அமைச்சரவையில் புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு முன் பிரதமர் அன்வார் பல காரணிகளைக் கருத்தில் கொள்வார் என்றும் அந்தோனி கோக் சுட்டிக் காட்டினார்.

தற்போது இரு அமைச்சர்களுக்கும் விடுமுறை செல்ல மட்டுமே பிரதமர் அனுமதித்துள்ளார் என்று அந்தோனி லோக் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதுமட்டுமல்லாமல்,  டிஏபி எந்த கட்சியின் உள் விவகாரங்களிலும் தலையிடாது என்றும் கூறினார்.

முன்னதாக தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் UMNO-வை விட்டு வெளியேறி PKR-ல் சேர விண்ணப்பித்திருந்தார். 

தனது கட்சி இதில் ஈடுபடவில்லை என்பதால் இது குறித்து தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset