நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து விளையாட்டில் இளம் ஆட்டக்காரர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை  பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் தொடரும்: பத்துமலை

சுபாங்ஜெயா -

கால்பந்து விளையாட்டில் இளம் ஆட்டக்காரர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் தொடரும். அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது.

இப்போட்டிகளில் சிறந்து விளங்கும் போட்டியாளர்களை கொண்டு பல போட்டிகளில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் களமிறங்கி வருகிறது.

அவ்வகையில் அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் அவ்வணியினர் களமிறங்கி உள்ளனர்.

இந்தியாவின் ஃபாட்வே அனைத்துலக பள்ளி அணியினர் மலேசியா வந்துள்ளனர்.

சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு ஆதரவுடன் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்க அணியினர் இப்போட்டியில் களமிறங்கினர். இவ்வாட்டம் நமது போட்டியாளர்களுக்கு புதிய அனுபவத்தை தந்துள்ளது.

அதே வேளையில் அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்குவதற்கு உற்சாகத்தையும் தரும் என நான் நம்புகிறேன்.

ஆக இந்திய மாணவர்களின் கால்பந்து மேம்பாட்டிற்கான இதுபோன்ற திட்டங்கள் தொடரும் என்று பத்துமலை கூறினார்.

கால்பந்து விளையாட்டில் இந்திய இளைஞர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டும்.

இதுவே பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் இலக்கு என்று அச்சங்கத்தின் துணைத் தலைவர் குணா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset