நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

யாரோ ஒருவர் என் தாயை அவதூறாக பேசினார்: அமாட் டியாலோ

கோலாலம்பூர்:

யாரோ ஒருவர் என் தாயை அவதூறாக பேசியதால் நான் கோபமடைந்தேன்.

மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் அமாட் டியாலோ இதனை கூறினார்.

ஆசிய சுற்றுப்பயணத்தின் போது மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மலேசியாவுக்கு வந்தனர்.

இங்கு நடைபெற்ற ஆசியான் ஆல் ஸ்டார் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் மென்செஸ்டர் யுனைடெட் களமிறங்கியது.

ஆட்டத்திற்கு பின் ரசிகர்களைக் கடந்து செல்லும்போது அமாட் டியாலோ ஆபாசமான விரல் சைகையை காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் தந்த அவர் யாரோ ஒருவர் என் தாயை அவமதித்ததால் அவ்வாறு செய்தேன்.

நான் மற்றவர்களை மதிக்கிறேன், ஆனால் என் அம்மாவை அவமதிப்பவர்களை அல்ல. 

நான் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது. ஆனால் நான் செய்ததற்கு நான் வருத்தப்படவில்லை என டியால்லோ நேற்று எக்ஸ்  வலைத்தளத்தில் இவ்வாறு எழுதினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset