நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?

பியூனஸ் அயர்ஸ் -
கால்பந்து பிரபலம் டியாகோ மரடோனாவின்  மரணத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் 7 மருத்துவர்களின் குற்றவியல் வழக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

வழக்கின் ஒரு நீதிபதி பாரபட்சமாக நடந்து கொண்டார் என்ற சந்தேகத்தில் வழக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி ஜுலியெட்டா மகின்டச் மரடோனாவின் மறைவு குறித்த ஆவணப்படத்தில் பங்கேற்றார் என்று மருத்துவர்களின் வழக்கறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

வழக்கில் மூன்று நீதிபதிகள் உள்ளனர். திருவாட்டி மகின்டச் வழக்கிலிருந்து அகற்றப்பட்டால் அவருக்குப் பதிலாக வேறொரு நீதிபதி வருவாரா அல்லது மீண்டும் வழக்கை முதலிலிருந்து தொடங்கி புதிய மூன்று நீதிபதிகள் நியமிக்கப்படுவார்களா என்று தெரியவில்லை.

மருத்துவர்கள் மரடோனாவின் உடல்நலனில் அலட்சியமாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

மரடோனா 2020ஆம் ஆண்டு மூளை அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்தார்.  அவர் பல வருடங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset