
செய்திகள் மலேசியா
ஃபிளேம் மானிய, கடனுதவி மாநாடு, கண்காட்சியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்: நிவாஸ்
பெட்டாலிங்ஜெயா:
ஃபிளேம் மானிய, கடனுதவி மாநாடு, கண்காட்சியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து பயன் பெற்றுள்ளனர்.
நிஷானா அறவாரியத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் இதனை கூறினார்.
நிஷானா அறவாரியத்தின் ஏற்பாட்டிலான இம்மாநாடு பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெற்று வருகிறது.
சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்காக அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி உள்ளது.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் இவ்வணிகர்களின் மேம்பாட்டிற்கான 60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மானியமாகவும் கடனுதவியாகவும் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆக இவ்விவகாரங்களை சிறு, குரு, நடுத்தர வணிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட அரசாங்க இலாகாக்கள், வங்கிகள், தனியார் நிறுவங்கள் இங்கு முக்கிப்பிடங்களை அமைத்துள்ளன.
இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.
வரும் காலங்களில் இன்னும் பெரிய அளவில் ஃபிளேம் மானிய, கடனுதவி மாநாடு, கண்காட்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm